Advertisment

மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள், 17 வயதிற்கு மேல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்: சத்யபிரதா சாகு

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.

author-image
WebDesk
New Update
sathya

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.

Advertisment

தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இறுதி வாக்காளர்கள் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.

தமிழ்நாடில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியும், பெண் வாக்காளர்கள் 3.10 கோடி, முன்றாம் பாலினத்தவர்கள் 8,016 பேரும் உள்ளனர். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

” ஜனவரி மாதம் 18 வயதை தொடங்கும் நபர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். புதிய வாக்காளர்கள் 3.94 லட்சம் பேர் உள்ளனர். அனைத்து பள்ளி கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி 18 வயது நிரம்பியவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள்  என்பதை கண்டறிய  இருக்கிறோம்.

40 முதல் 49 வயதில்தான் அதிகபடியான வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 1.37 கோடி உள்ளனர்.  அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக  நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 4, 5,18, 19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும். கடந்த ஆண்டு 6.2 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 6.11 கோடியாக உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு  வாக்குச்சாவடி  நிலை அதிகாரிகளிடம்  நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் என்.வி.எஸ்.பி இணையதளம் வாயிலாக வாக்காளர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment