/indian-express-tamil/media/media_files/CmrvA8cN6ivUCouWPDDx.jpeg)
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த மே 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். அதன் பின் அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அப்போது, நீதிபதி பாலாஜி இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று இந்த வழக்கில், சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் வழக்கு 3-வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரித்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.