/indian-express-tamil/media/media_files/2024/12/20/gN1jDOtRxiPQ9wbu501S.jpg)
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைதின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கஞ்சா வழக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி செங்கமல செல்வன் சவுக்கு சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூய்மை பணியாளர், தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டு பேசியதாக
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.