Advertisment

சவுக்கு சங்கர் தாயார் மனு: சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
New Update
madras high court reserves order on savukku shankar preventive detention Tamil News

மொத்தமாக சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் (Savukku Shankar), ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். 

Advertisment

இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை, சேலம், சென்னை, திருச்சி சைபர் க்ரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சவுக்கு சங்கருக்கு எதிராக திருச்சியில் நடந்து வரும் வழக்கில் அவருக்கு மே 28 வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவரது காரை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம் மற்றும் கார் ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும், மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, நேற்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு இன்று (வியாழக்கிழமை) மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். இதனையடுத்து, இந்த மனுவை மே 27 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.  

சவுக்கு சங்கர் தாயார் மனு  

இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) நேற்று புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.  

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை ரத்து செய்து, தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய அடங்கிய அமர்வுக்கு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர்  தரப்பு உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கின் விசாரணை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்துள்ளார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai High Court Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment