Advertisment

பெண் போலீஸ், உயர் அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு: சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கோவை கோர்ட் உத்தரவு

பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Savukku Shankar Ganja case bail update and Goondas case status lates news update in tamil

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை மே 14-ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீஸ் அவரை தேனியில் வைத்து மே 14 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisment

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கிலும், கரூர் பணமோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக அவர் இன்னும் சிறையில் உள்ளார். 

இந்நிலையில், பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய  வழக்கின் விசாரணை கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment