சவுக்கு சங்கருக்கு தொடரும் சிக்கல்; குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்திய அறிவுரைக் கழகம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Savukk.jpg
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த மே 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.

Advertisment

அதன் பின் அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். 

தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது சி.எம்.டி.ஏ அதிகாரி அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அந்த வழக்கிலும் சிறையில் அடைத்தனர். அதன்பின், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். 

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாக, சென்னையில் உள்ள அறிவுரைக் கழகம் விசாரணை நடத்தி, அவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்தி உள்ளது. 

Advertisment
Advertisements

சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டது என்றும், இது, காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: