/indian-express-tamil/media/media_files/QOFlJ8IKPNQcuO9hU04z.jpg)
பெண் போலீஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் 2-வது குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டது.
உயர் நீதிமன்றம் ஆக.9-ம் தேதி குண்டர் சட்டத்தை ரத்து செய்த நிலையில், அவர் மீது தேனி போலீசார் ஆக.12-ம் தேதி குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில், பாலாஜி ஸ்ரீநிவாசன், கே.கவுதம் குமார் மற்றும் ஹர்ஷா திரிபாதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
தொடர்ந்து வாதத்தை கேட்டபின் நீதிபதிகள், “நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம்.. சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளி வருகிறார்.. பிறகு மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.