Advertisment

சவுக்கு சங்கர் கோரிக்கை ஏற்பு: ஆட்கொணர்வு மனுவை வெள்ளிக் கிழமை விசாரிக்க ஐகோர்ட் முடிவு

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
madras high court reserves order on savukku shankar preventive detention Tamil News

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்தனர். 

Advertisment

இதனிடையே, தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்டப்பட்டது. மேலும், சவுக்கு மீது சென்னை, திருச்சி கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். 

நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்று வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். 

இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்னும் நடைபெறாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதற்கிடையில், வுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஏற்கனவே தெரிவித்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று பட்டியலிடப்படாத நிலையில் சவுக்கு சங்கர் சார்பில் மீண்டும் முறையிடப்பட்டது. இதனையடுத்து, வருகிற வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 26) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment