/indian-express-tamil/media/media_files/Ktz8WnCGf5C3Hzs5kcyV.jpg)
'யூடியூபர்' சவுக்கு சங்கர்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆட்கொணர்வு மனுவை அவருடைய தாயார் கமலா தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமை (24.05.2024) நடைபெற்றது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதி செந்தில் பாலாஜி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின்மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரண்டு நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற காவலில் அடைக்க சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.