Advertisment

கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முழக்கம்

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாதத் தனத்தை காட்டுகிறது; புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்

author-image
WebDesk
New Update
 savukku.jpg

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாதத் தனத்தை காட்டுகிறது; புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

“கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பிணை கிடைத்த பிறகு போலீசார் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் முழக்கமிட்டார். புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்தியின்படி, “தமிழக அரசானது தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காகதான் காவல்துறையை வைத்துள்ளது. தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாததன் விளைவுதான் 33 உயிர்களை இன்று பலி வாங்கியுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாதத் தனத்தை காட்டுகிறது” என்று சவுக்கு சங்கர் முழக்கமிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Savukku Shankar Kallakurichi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment