Advertisment

கரூரில் சவுக்கு சங்கர் ஆதரவாளர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

கரூரில் சவுக்கு சங்கர் ஆதரவாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
The court has imposed a fine of 1 lakh rupees on Chawku Shankar

சவுக்கு சங்கரின் ஆதரவாளர் வேலாயுதம்பாளையம் ராஜா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Savukku Shankar supporter Raja case: முன்னாள் அரசு அதிகாரியான சவுக்கு சங்கர் அரசு குறித்து துணிச்சலாக விமர்சித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வாங்குவதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ளது எனக் கூறினார். மேலும், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான புதிய வீட்டையும் விமர்சித்தார்.

Advertisment

இந்த நிலையில், சவுக்கு சங்கரின் ஆதரவாளர் வேலாயுதம்பாளையம் ராஜா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராஜா படுகாயம் அடைந்தார். அவருடன் இருந்த அவரின் நண்பர்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது ராஜா, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

savukku
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment