/indian-express-tamil/media/media_files/PGs3KGzCcQD1KYkTj1eD.jpg)
சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பிணை மனுவை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Coimbatore | Savukku Shankar: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் சித்ரவதைக்கு உள்ளாவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் சிறையில் நேரடி ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாவதாகவும், நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் 4 வாது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அதனை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி வைத்த நிலையில், மாவட்ட சட்ட உதவி மையத்தில் உள்ள வழக்கறிஞர் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மாவட்ட சட்ட உதவி மையத்தில் உள்ள 3 வழக்கறிஞர்கள், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் சிறையில் ஆய்வு செய்ய சென்றுள்ளனர்.
மேலும், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான வழக்கு தொடர்பாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு வருகிற 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பிணை மனுவை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.