New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/06/mks-cv-2025-08-06-14-47-27.jpg)
அரசு திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
தமிழக அரசின் புதிய மற்றும் பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்ததுடன், அவருடைய பெயரைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் முகில் ரோஹத்சி, வில்சன் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை இன்று விசாரித்தது.
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:
’உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' போன்ற திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரசு நலத்திட்டங்களில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிரான மனு தேவையற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. அனைத்துக் கட்சிகளும் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபடுவதை மனுதாரர் எதிர்க்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தை மட்டும் எதிர்த்ததன் உள்நோக்கம் கேள்விக்குரியது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்றால், அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்க வேண்டும். அரசியல் சண்டைகள் தேர்தல் களத்தில் இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது.
இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மனுத் தாக்கல் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.