Advertisment

எல். முருகன் மீது தி.மு.க அவதூறு வழக்கு; இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மத்திய அமைச்சர் எல். முருகன் மீது தி.மு.க-வின் முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
L Murugan

எல். முருகன் மீது தி.மு.க தொடந்த அவதூறு வழக்கு; இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

மத்திய அமைச்சர் எல். முருகன் மீது தி.மு.க-வின் முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் தலித்துகளுக்கு சொந்தமான நிலத்தில் முரசொலி அலுவலகம் செயல்படுவதாக எல். முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதை அடுத்து, அவர் மீது தி.மு.க-வின் முரசொலி அறக்கட்டளை அவதூறு வழக்கு தொடர்ந்தது.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு எதிராக தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் மறுத்துவிட்டது.

இந்த மாத தொடக்கத்தில்,  சென்னை உயர்நீதிமன்றம் எல். முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்தது. மேலும், இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, அவதூறு அறிக்கை முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக கூறப்படவில்லை என்பதால், எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று எல். முருகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. மேலும், முரசொலி அறக்கட்டளையின் அவதூறு புகாரை தொடர முடியுமா என்றும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய இணை அமைச்சரின் அறிக்கைகள்  சொத்தின் உரிமை மற்றும் உரிமையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த வழக்கின் தகுதிக்குள் செல்ல முடியாது என்றும், விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, எல். முருகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் கீத் அஹுஜா மூலம் உச்ச நீதிமன்றத்தில் எல். முருகனின் மனு தாக்கல் செய்யப்பட்டது. முரசொலி அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் தேவயானி குப்தா ஆஜரானார்.

எல்.முருகன் மீது தி.மு.க-வின் முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது. 

மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான எல்.முருகனுக்கு எதிராக தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் முரசொலி அறக்கட்டளை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

L Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment