சென்னை, செங்கல்பட்டு உள்பட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழை பெய்வதால் விடுமுறை வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோல கோவையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“