Advertisment

எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணி; இனி ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

எமிஸ் வலைதளத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகளை இனிமேல் ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School Education Department appoints special officers, special officers district wise to supervise education schemes, கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு, Tamil Nadu School Education Department, special officers in district wise to supervise education schemes

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் இடைநிலை நேர்முக உதவியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எமிஸ் வலைதளத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகளை இனிமேல் ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் இடைநிலை நேர்முக உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்விஅலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 முக்கியமாக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும்போது கற்றல் - கற்பித்தல் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரியவருகிறது. எனவே, ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் அந்த பணியாளர்களைக் கொண்டு மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை 100 சதவீதம் முழுமையாக விவரங்கள் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அரசு செயலரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment