‘எனக்கு 2 அப்பாக்கள் இருக்கிறார்கள்...’ நெல்லை முபாரக் பேச்சைக் கேட்டு விம்மி அழுத திண்டுக்கல் சீனிவாசன்

நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

author-image
WebDesk
New Update
Nellai Mubarak

நெல்லை முபாரக் (இடது), முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் (வலது)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

“எனக்கு 2 அப்பாக்கள் இருக்கிறார்கள், ஒரு அப்பா திண்டுக்கல் சீனிவாசன், மற்றொரு அப்பா நத்தம் விஸ்வநாதன்” என்று திண்டுகல் வேட்பாளர் நெல்லை முபாரக் பேசியதைக் கேட்டு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விம்மி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனால், அ.தி.மு.க கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார். திண்டுக்கல்லில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அன்பாக அப்பா என்று குறிப்பிட்டு பேசியதைக் கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சிவசப்பட்டு விம்மி அழுதார். நெல்லை முபாராக் அப்பா என்று குறிப்பிட்டு பேசியபோது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சிவசப்பட்டு விம்மி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அ.தி.மு.க கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது: “இரண்டு அப்பாக்கள் எனக்கு இருக்கிறார்கள். என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கல் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.   காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். லட்சியமாகக் கருதுகிறேன். இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது” என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

Advertisment
Advertisements

நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்  சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dindugul Srinivasan Nellai Mubarak

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: