மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அண்மையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழகத்தில் தி.மு.க உள்பட பல்வேறு கண்டனம் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

publive-image

இந்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து இன்று (அக்டோபர் 19) கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment
Advertisements

மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தி பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: