Advertisment

மக்கள் வாழணுமா? சாகணுமா? சீமான் கேள்வி

கோரமண்டல் ஆலையை மீண்டும் செயல்பட தடைவிதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஓட்டியுள்ளது. ஆலை மீண்டும் செயல்பட அம்மோனியா கொண்டு செல்லும் குழாய்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Seeman

கோரமண்டல் உரத் தொழிற்சாலை வாயு கசிவு வழக்கு, விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருவொற்றியூர் எர்ணாவூர் கிராமத்தில் மோண்டேஜ் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான உர கிடங்கு உள்ளது.

அதேபோல் இந்நிறுவனம் கத்திவாக்கம் கிராமத்தில் அம்மோனியா சேமிப்பு கிடங்கும் வைத்துள்ளது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு வரை கடலில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கப்பல்களில் கொண்டு வரப்படும் திரவ அம்மோனியா ரசாயனம் கொண்டு செல்லப்படுகிறது. 500 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தக் குழாவில் டிச.26ஆம் தேதி நள்ளிரவில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பர்மா நகர், நேதாஜி நகர், பெரிய குப்பம் மற்றும் சின்ன குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டன. இந்த நிலையில் கடற்கரை கிராம மக்கள் 5 நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது கோரமண்டல்  உரத் தொழிற்சாலை வேண்டாம் என்பதே கட்சியின் நிலைப்பாடு என கூறினார்.

 தொடர்ந்து அவர் பேசுகையில், " நாங்கள் வாழ முடியவில்லை; வாழ்வியலையும் வாழ்விடத்தையும் இழந்து உள்ளோம். நாங்கள் வாழ வேண்டுமா இல்லை சாக வேண்டுமா? " எனக் கேள்வி எழுப்பினார்.

 தொடர்ந்து கோரமண்டல் உர தொழிற்சாலையில் மூட வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment