காவலர் குடியிருப்பில் 2-ம் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை

காவலர் தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலர் தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
காவலர் குடியிருப்பில் 2-ம் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்த மணியரசு என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நத்தி வருகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியை சேர்ந்தவர் மணியரசு (30). பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலைத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த இருக்கு, வரும் 1-ந் தேதி அவருக்கு திருணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் தீவிரமாக செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பணிக்கு செல்லாத மணியரசு, காவல் நிலைய வளாகத்திற்குள் இருந்த காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மணியரசுவின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர் தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

பி.ரஹ்மான் கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: