திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அடித்து நொறுக்குவேன் என டாக்டர் மோதி முரளி என்பவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெரியார் சிலைக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் அன்பு உள்ளிட்டோர் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் டாக்டர் மோதி முரளி என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த பரணி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சைபர் க்ரைம் போலீசார் ஈரோட்டில் வைத்து கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட மதவாத சக்திகள் முயல்வதாக திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“