மேய்ச்சல் உரிமை கோரி கால்நடைகள் மாநாடு: ஆக. 3-ல் தேனியில் ஆடு, மாடுகளை மேய்ப்பேன் - சீமான் பேச்சு

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமையை கோரியும், அதற்கான தடைகளை நீக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையான விராதனூர் பகுதியில் சிறப்பான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமையை கோரியும், அதற்கான தடைகளை நீக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையான விராதனூர் பகுதியில் சிறப்பான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Seeman cattle maanadu

இந்த மாநாடு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது. மாநாட்டுக்காக, சுமார் 2000 கிடை மாடுகள், ஆடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மாநாட்டு திடலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமையை கோரியும், அதற்கான தடைகளை நீக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையான விராதனூர் பகுதியில் சிறப்பான மாநாடு நடைபெற்றது.

Advertisment

இந்த மாநாடு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.  மாநாட்டுக்காக, சுமார் 2000 கிடை மாடுகள், ஆடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மாநாட்டு திடலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

கால்நடைகள் மாநாட்டில், வனத்துறையின் கீழ் உள்ள பகுதிகளில் கால்நடைகள் மேய்வதைத் தடைசெய்துள்ள நிலைமை குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமையை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும். இது நம் விவசாய வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே உள்ளது” என சீமான் வலியுறுத்தினார்.

ஆடு மாடுகள் மாநாட்டில் உற்சாகமாகப் பேசிய சீமான், “ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

Advertisment
Advertisements

மேலும், “ஆகஸ்ட் 3-ம் தேதி தேனியில் உள்ள மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் நானே நேராக சென்று ஆடு, மாடுகளை மேய்க்க உள்ளேன்; வனக்காவலர் தடுத்தாலும் வழக்கு போட்டாலும் விடமாட்டேன்” என்று சீமான் கூறினார்.

மேலும், இயற்கை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கும் உரிமை, அரசு வேலைவாய்ப்பாக ஆடு-மாடு மேய்த்தல் மற்றும் தேவையற்ற நவீன வளர்ச்சியை எதிர்த்து நிலவுரிமை பேணல் ஆகிய தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்.

விராதனூரில் நடைபெற்ற இந்த மாநாடு, தமிழக அரசியல் வரலாற்றில் கவனம் பெறத்தக்கதாய் அமைந்ததோடு, சிறுபான்மை மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக ஒலித்த ஓர் முக்கியமான முயற்சி என்றும் பார்க்கப்படுகிறது.

 

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: