/indian-express-tamil/media/media_files/cP0rVz1Tka7d4euX0woB.jpg)
நடிகர் மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது என்றும் பெரிய நடிகர்கள் என்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா தொடர்பாக மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கு அவர் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் மனிப்பு கேட்ட முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது
” நான் இதை பற்றி கருத்து சொன்னால், இதை மட்டுமே ஊடகம் வெளியிடும். அவர் என்ன பேசினார் என்று நான் கேட்கவில்லை. என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. இதை வேண்டும் என்றே பேசியிருப்பாரா என்று தெரியவில்லை. நகைச்சுவைக்காக பேசியிருக்கலாம். அதனால் பலரின் மனது காயமடைந்திருந்தால், வருத்தம் தெரிவித்து சென்றுவிடலாம். அவரது மனத்திற்கு அது தவறு என்று தோன்றவில்லை என்றால் அவர் மனிப்பு கேட்க மறுப்பார் தானே. இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.