ஆளுனர் தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது: சீமான்

ஆளுநர் ஆர்.என். ரவி தொர்பான கேள்விக்கு, “தமிழ்நாடு எங்கள் நாடு. இஷ்டம் இருந்தா இரு. இல்லை ஓடு. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது” என்றார் சீமான்.

ஆளுநர் ஆர்.என். ரவி தொர்பான கேள்விக்கு, “தமிழ்நாடு எங்கள் நாடு. இஷ்டம் இருந்தா இரு. இல்லை ஓடு. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது” என்றார் சீமான்.

author-image
WebDesk
New Update
Seeman said Tamil Nadu is our country

தமிழ்நாடு எங்கள் நாடு என சீமான் கூறினார்.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என கவர்னர் ராஜ்பவனில் கூறியுள்ளாரே எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சீமான், “அது கவர்னர், சுப்பிரமணிய சாமி போன்றோருக்கு சரியாக இருக்கும். தமிழ் திரு நாடு தன்னை பெற்ற தாய் என கொண்டாடு எனப் பாடினார் பாரதியார்.
அண்ணா தமிழ்நாடு என பெயர் வைக்கும் முன்னே, பக்தவச்சலம் முதலமைச்சராக இருக்கும்போதே தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இரட்டை மலை சீனிவாசன் 1920க்கு முன்னரே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார். தமிழ்நாடு எங்கள் நாடு. இஷ்டம் இருந்தா இரு. இல்லை ஓடு. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது” என்றார்.
மேலும், “அவருக்கு பொழுதுபோகவில்லை. இதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட வேண்டும்” என்றார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் என எழுத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: