சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதில், "மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜய லட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது
சீமானின் வற்புறுத்தலினால் 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளார் எனவும் விஜயலட்சுமியிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை ஆராய்ந்ததில் விஜய லட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்ப பிரச்னை, திரைத்துறை பிரச்னையால் சீமானை விஜய லட்சுமியின் குடும்பத்தினர் அணூகியுள்ளனர். அப்போது, திருமணம் செய்வதாகக் கூறி விஜய லட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.