Advertisment

கருணாநிதி அறிக்கையில் அந்த வார்த்தை: அவதூறு புகாருக்கு சீமான் பதில்

'கந்த சஷ்டி கவசத்திலும் அந்த வார்த்தை உள்ளது எனக் கூறிய சீமான், அந்த வார்த்தையை கருணாநிதி தனது அறிக்கைகளில் பயன்படுத்தியுள்ளார்" என்றும் கூறினார்.

author-image
WebDesk
New Update
Seeman NTK Trichy

கருணநிதியை அவதூறு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சீமான் பதிலளித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியாக தி.மு.க வெற்றியை பதிவு செய்துள்ளது. பா.ம.க இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 3ம் இடமும் பிடித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவதூறு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

இது தொடர்பாக பேசிய சீமான், “அந்த வார்த்தை உடன் சினிமா பாடல்கள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அந்த வார்த்தையை பயன்படுத்தி பலமுறை அறிக்கை எழுதியுள்ளார். ஏன் அந்த வரி கந்த சஷ்டி கவசத்தில் கூட உள்ளது” என்றார்.

தொடர்ந்து, “அ.தி.மு.க. பாடலை பாடிய சாட்டை துரைமுருகனை கைது செய்தவர்கள், அ.தி.மு.க. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் கேள்வியெழுப்பினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது கருணாநிதி தொடர்பான பாடலை பாடிய சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காலையில் அவரை கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment