கோவை கொடிசியா மைதானத்தில் மே 18-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் 'தமிழினம் பேரெழுச்சி' பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி மே 17-ஆம் தேதி அங்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார்.
நடைபயிற்சியின் போது, சாலையோரத்தில் இருந்த பதநீர் விற்கும் கடைக்குச் சென்ற சீமான், அங்கு தொண்டர்களுடன் இணைந்து பதநீர் அருந்தினார்.
இதனைத் தொடர்ந்து, சாலையோரத்தில் கரும்பு ஜூஸ் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம், அதனை தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்ட சீமான், பின்னர் அங்கிருந்த தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுக் கொடுத்தார். இந்த நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
'தமிழினம் பேரெழுச்சி' பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சீமான் தொண்டர்களுடன் இணைந்து பதநீர் அருந்தியது மற்றும் கரும்பு ஜூஸ் போட்டுக் கொடுத்தது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.