கோவையில் தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுக் கொடுத்து மகிழ்ந்த சீமான்

கோவை சென்றுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி தொண்டர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவர்களுடன் சேர்ந்து பதநீர், கரும்பு ஜூஸ் குடித்து மகிழ்ந்தார்

கோவை சென்றுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி தொண்டர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவர்களுடன் சேர்ந்து பதநீர், கரும்பு ஜூஸ் குடித்து மகிழ்ந்தார்

author-image
WebDesk
New Update
Seeman at CBE

கோவை கொடிசியா மைதானத்தில் மே 18-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் 'தமிழினம் பேரெழுச்சி' பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி மே 17-ஆம் தேதி அங்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார்.

Advertisment

நடைபயிற்சியின் போது, சாலையோரத்தில் இருந்த பதநீர் விற்கும் கடைக்குச் சென்ற சீமான், அங்கு தொண்டர்களுடன் இணைந்து பதநீர் அருந்தினார்.

இதனைத் தொடர்ந்து, சாலையோரத்தில் கரும்பு ஜூஸ் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம், அதனை தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்ட சீமான், பின்னர் அங்கிருந்த தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுக் கொடுத்தார். இந்த நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

Advertisment
Advertisements

 

'தமிழினம் பேரெழுச்சி' பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சீமான் தொண்டர்களுடன் இணைந்து பதநீர் அருந்தியது மற்றும் கரும்பு ஜூஸ் போட்டுக் கொடுத்தது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: