Advertisment

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு பதில்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி 15 தமிழ் புத்தாண்டுக்குள் திறக்கப்படும்; அமைச்சர் சேகர் பாபு முக்கிய தகவல்

author-image
WebDesk
New Update
kilambakkam Bus terminus

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி 15 தமிழ் புத்தாண்டுக்குள் திறக்கப்படும்; அமைச்சர் சேகர் பாபு முக்கிய தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில், தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை சராசரியாக 65,000 பயணிகள் தென் மாவட்டங்களில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில், இந்த எண்ணிக்கை 1 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த பேருந்து நிலையம் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 100 பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி சோதனை ஓட்டம் நடைபெற்றது. பேருந்துகள் மீண்டும் வெளியே வந்து ஊரப்பாக்கம் வழியாக சென்று மீண்டும் கிளாம்பாக்கம் வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜனவரி 15 தமிழ் புத்தாண்டுக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல், தமிழ் புத்தாண்டு வருகின்ற ஐனவரி 15 ஆம் தேதி வருகிறது. அதற்குள் பொதுமக்கள் பயன்படும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார். மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்குவதை தடுக்க 1200 மீட்டருக்கு வடிகால் பணிகள் நடைபெற்று, தற்போது முடிவடைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையம் 1 லட்சம் பேர் பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2310 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Minister PK Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment