அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ். இவர் தனது சொந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து சமபவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்ட விசாராணையில் ஈடுபட்டனர். கடும் வயிற்று வலியால் தொடர்ந்து அவதிபட்டு வந்த தேவராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாளை அவரது உடலானது உடற்கூறு செய்யப்பட்டு இறப்புக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படும். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு, இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் அண்ணனின் திடீர் மரணம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.