கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: விரைவில் மலிவு விலை உணவகம், ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்படும்: சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். “ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு  இடம் மாற்றம் செய்யும்போது கோயம்பேட்டில் 32 கடைகள்  இருந்தன. அந்த 32 கடைகளுக்கு உரிய  உரிமையாளர்களை கணக்கிட்டால், மொத்தம் 11 பேர் தான் உரிமையாளர்கள் ஆவார். இந்த 11 உரிமையாளர்களுக்கு  கிளாம்பாக்கத்தில் மலிவு விலை கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும். கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களில் தேவையான 90 % அடிப்படை  வசதியை செய்துள்ளோம். விரைவில் ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்படும் ” என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: