மனித உறுப்புகளை விற்பனை செய்வது கொடூரம்: ஐகோர்ட் கடும் கண்டனம்

இது போன்ற செயல் மனிதாபிமானத்துக்கே எதிரானது, மருத்துவ துறையின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் இருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இது போன்ற செயல் மனிதாபிமானத்துக்கே எதிரானது, மருத்துவ துறையின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் இருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
high court (1)

மனித உறுப்புகளை பொருட்கள்போல் விற்பனை செய்வது சமூகத்தில் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மனித உறுப்புகள் விற்பனை தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.இளங்கோ, எஸ்.லட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் போது, நோயாளிகளின் உறுப்புகளை சில மருத்துவர்கள் தங்களது சொந்த நலனுக்காக விற்பனை செய்ததாகவும், கிட்னி போன்ற முக்கிய உறுப்புகள் எப்போது திருடப்பட்டன என்பது கூட நோயாளிகளுக்கே தெரியாமல் போகும் நிலைமை மிகுந்த வேதனைக்குரியது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது போன்ற செயல் மனிதாபிமானத்துக்கே எதிரானது, மருத்துவ துறையின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் இருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கிட்னி விற்பனை குறித்த புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணையின் நிலை, இதில் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் நடுவர் குழுவினரின் பங்கைப் பற்றிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான தொடர்ந்த விசாரணை விரைவில் மீண்டும் நடைபெற உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: