கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் - 11 பேர் கைது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

author-image
WebDesk
New Update
a

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று (மார்ச்-23) சேப்பாக்கத்தில் நடந்த சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்திய திருவல்லிக்கேணி போலீசார், கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்க முயன்ற 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்து 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 11 பேரிடம் இருந்தும் ரூ.53,350 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai black ticket Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: