‘ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர இளைஞர்கள் ஆதரவு தேவை’: செல்லூர் ராஜூ வேண்டுகோள்

ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.

ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sellur Raju 2

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அ.தி.மு.க இளைஞரணியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசினார்.

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அ.தி.மு.க இளைஞரணியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, “அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கான பல நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும். எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்யான தகவல்களை முறியடித்து, உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல இளைஞர்கள் முன்னணியில் செயல் பட வேண்டும்,” எனக் கூறினார்.

Advertisment

மேலும், “இளைஞர்களின் சுறுசுறுப்பும், துணிவும் கட்சியின் வேருகளை பலப்படுத்தும். அணில் எப்படி ராமனுக்கு பாலம் கட்ட உதவியதோ, அதுபோல இளைஞர்களும் அ.தி.மு.க. வெற்றிக்காக சிறியதாயினும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்,” என்றார்.

செல்லூர் ராஜுவின் இந்த உவமை சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஆதரவும், எதிர்ப்பும் பெற்றுள்ளது. சிலர் இந்த உவமையை நேர்த்தியான ஊக்கமளிக்கும் ஒப்புமையாகப் பாராட்டியிருந்தாலும், மறுபக்கம் சிலர் இது இடப்பெயர்ந்த உவமையாகவும், பொருத்தமற்றதாகவும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, செல்லூர் ராஜுவின் உரை புதிய உற்சாகத்தையும், செயற்பாட்டு உறுதியையும் அளித்ததாகத் தெரிகிறது.

Advertisment
Advertisements

Sellur Raju

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: