Advertisment

'நான் கோஷ்டி அரசியல் செய்ய மாட்டேன்; எல்லோரும் ராகுல் காந்தி அணி தான்': செல்வப் பெருந்தகை

நான் கோஷ்டி அரசியல் செய்ய மாட்டேன்; எல்லோரும் ராகுல் காந்தி அணி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நான் கோஷ்டி அரசியல் செய்ய மாட்டேன்; எல்லோரும் ராகுல் காந்தி அணி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

“ என் மீது நம்பிக்கை வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே சட்டமன்ற கட்சித் தலைவராக முக்கியமான பொறுப்பை அளித்தார்கள். எல்லா தலைவர்களையும் அனுசரித்து, கட்சியை வளர்க்க பாடுபடுவேன். நான் கோஷ்டியாக இருந்தால்தான் எல்லோரும் கோஷ்டியாக இருப்பார்கள். அதற்கு எங்களிடம் வேலை இருக்காது. எல்லோரும் ராகுல் காந்தி அணிதான். கருத்துவேறுபாடு இனி ஏற்படாத வகையில் பார்த்துகொள்வேன்.

சமூகநீதியில் தான் காங்கிரஸ் கட்சி கட்டப்பட்டுள்ளது. சமூகநீதி மேல் யாரெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

இந்த தேசத்திற்கு பெரிய ஆபத்து பா.ஜ.க-தான். அவர்களை வீழ்த்துவதுதான் முதல் பணி. அழகிரி அவருக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்தார். உடல் நிலை சரியில்லாதபோதும் அவர் வேலை செய்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் தூத்துக்குடி வரைக்கும் சென்று பணியாற்றினார். 39 தொகுதிகளும் கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment