/indian-express-tamil/media/media_files/2025/08/26/selvaperunthagai-2-vlp-2025-08-26-20-52-36.jpg)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
நாட்டில் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, அது வாக்கு சீட்டாக இருக்கட்டும், பேச்சுரிமை, எழுத்துரிமை, மக்கள் பணத்தை, பண மதிப்பீடு, ஜி.எஸ்.டி 40 சதவீதம் பிடுங்குவதாக இருக்கட்டும், சுமத்துவதாக இருக்கட்டும் தொடர்ந்து ஒன்றிய அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை விழுப்புரத்தில் கூறினார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம்ப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: “ஒரு முக்கியமான செய்தியை நான் இன்று சொல்ல விரும்புகிறேன், நம்முடைய மேதகு முன்னால் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜஸ்தானில் உள்ள நண்பர்கள் இங்கு அவர் வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்குத் தெரியவில்லை. பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள் அவரை எங்கேயாவது சிறை பிடித்து வைத்து உள்ளனரா, எங்களுடைய குடியரசுத் துணைத் தலைவரை எங்களிடம் காட்டுகள் என்று கோரிக்கை விடுத்து கொண்டு இருக்கின்றனர்.
அவரை மக்கள் முன் வெளியே கொண்டு வர பா.ஜ.க அரசு தயங்குகிறது. ஏன், இது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அரசு தானா என சந்தேகம் எழுகிறது. அதனை பா.ஜ.க அரசு தலைவர்கள் சொல்ல வேண்டும். அவரை வெளியே வர விடாமல் தடுக்கும் சக்தி எது, அவர் எங்கே இருக்கிறார். அவரை பார்க்க முடியவில்லை என்றால் நாங்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் நிலை உள்ளது. இது இந்தியா முழுக்க பேசப்படும் செய்தியாக ஏன் அவரை மறைத்து வைத்திருக்கிறீர்கள்.
அவர் ஏன் வாய் திறக்கவில்லை, அவர் ஏன் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு நெருக்கடி கொடுத்தது யார், இளைஞர்கள் மத்தியில் சட்டக் கல்லூரியில் படித்து மேனால் குடியரசுத் தலைவராக இருப்பவருக்கு இங்கு பாதுகாப்பு இருக்கிறதா அவரை வெளியே கொண்டு வந்து காட்டுங்கள் என ஒன்றிய அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.” என்று கூறினார்.
39 சதவீதம் வாக்குகள் பெற்று பா.ஜ.க தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “39 சதவீதம் எந்த கூட்டணி கணக்கு என தெரியவில்லை.
ஆனால், எங்கள் இந்தியா கூட்டணி 50 சதவீதம் மேல் வலிமையான வாக்குகள் பெற்று வெற்றி பெறும் மக்களிடம் செல்வாக்குள்ள கூட்டணி தான் இந்தியா கூட்டணி என செல்வப்பெருந்தகைக் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.