Advertisment

ஜூன் 4-க்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை: அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை பதில்

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப்போவதில்லை என்றும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று சொன்னால் நாங்களே உணவு ஏற்பாடு செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப்போவதில்லை என்றும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று சொன்னால் நாங்களே உணவு ஏற்பாடு செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தந்த விளக்கத்தில் “ தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றைகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன்.  எங்கள் அலுவகத்திற்கு வரும் தேதியை முன்கூட்டியே சொன்னால் உணவு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் அனைவருக்கும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்து புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.  தி.மு.க -வும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும் அன்றைய தினத்தில் சமூகவலைதளத்தில் பதிவேற்ற உள்ளோம்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “ஜூன் 4-க்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. எத்தனை பேர் இருப்பார் என்று சொன்னால் உணவு ஏற்பாடு செய்வோம். கடந்த 10 ஆண்டில் தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றி புத்தகமும் வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment