இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக பதவி வகித்து வரும் பாலச்சந்திரன், இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இந்த சூழலில் புதிய தலைவராக விஞ்ஞானி அமுதா நாளை முதல் பொறுப்பேற்கிறார். இவர் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வடகிழக்கு பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.