அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ல் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இவருக்கு ஜாமின் வழங்க மறுத்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அள்ளி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணையை மார் 18ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை நீதிபதி அல்லி ஏற்றுக்கொண்டு, விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“