Advertisment

செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவு; 39வது முறை காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு 39-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
 Senthil balaji case Enforcement Directorate to not grant bail and urge to order speedy trial Madras High Court Tamil News

செந்தில்பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 39-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2014-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisment

தேவசகாயம் என்பவர் 2015-ம் ஆண்டு அளித்த  புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் 2016-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனர். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடந்து, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து 2019-ம் ஆண்டு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவந்த நிலையில், 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சரானார்.

அப்போது, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்று கோரியது.

செந்தில் பாலாஜி 2022-ம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் 2022-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜூன் 13, 2022-ல் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மறுநாள், ஜூன் 14-ல் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைதான செந்தில் பாலாஜிக்கு சில நாட்களிலேயே நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஜாமின் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் ஜாமின் அளிக்க மறுத்து 5 முறை அவருடைய ஜாமின் மனுவை ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 39 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடுகையில்,  தனக்கு அமலாக்கத்துறை வழங்கிய வங்கி ஆவணங்கள் ஒரு மாதிரியாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வங்கி ஆவணங்கள் வேறுமாதியாகவும் இருப்பதாக  சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து,  வங்கி ஆவணங்களை பெற்றுக் கொள்ள கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். 

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு  நிறைவடைந்துள்ளது.  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) உடன் முடிவடைந்தது

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதனமை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 19-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment