செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செந்தில் பாலாஜி வழக்கு

செந்தில் பாலாஜி வழக்கு

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Advertisment

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கை சட்டபூர்வமானது எனக்கூறி,  ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், செந்தில்பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை  விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நாளை  விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை  சார்ப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: