Advertisment

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: சீகேட் ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் குறித்து இ.டி.-க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது, கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme Court Adjourns hearing Senthil Balaji plea to november 6 Tamil News

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில், சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது, கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது, கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு புதன்கிழமை (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைய நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே, நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை. பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படுவது குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுவதை ஏற்க முடியாது” என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் ஏற்கெனவே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வசம் இருந்தது” என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 

செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவித்தால் அவர் ஆதாரங்களை அழிக்க வல்லவர் என்று கூறிய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் நேரடியான கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்காததால், இன்று பதில் இல்லையென்றால் நாளை (ஜூலை 25) பதிலோடு வாருங்கள் என அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

senthil balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment