/indian-express-tamil/media/media_files/XzUkkT0T69v12pXsMUPT.jpg)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணியை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், அன்றைய தினம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் வேறு ஒரு நாளைக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.