Advertisment

கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை: செந்தில் பாலாஜி

கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Senthil Balaji instructs to completely stop the sale of fake liquor

அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் கலால் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மெத்தனால் கிடைக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Advertisment

தொடர்ந்து, மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச் சாராயம் அருந்திய 22 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கும் முன்பு பாரில் திருட்டுத்தனமாக மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment