/tamil-ie/media/media_files/uploads/2023/06/dendist.jpg)
பைப்பாஸ் அறுவை சிகிச்சை எப்போது?
அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள், புதன்கிழமை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இதயத்தின் ரத்த நாளங்களில் மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஓமந்தூர் மருத்துவர்கள் பைபாஸ் அறுவகை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரின் மனைவி கோரிக்கைய வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயரீந்திமன்றமும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவே காவிரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ” இன்று அவருக்கு பைப்பாஸ் அறுவை சிகிச்சை தேவையில்லை. மூத்த இதய அறுவை சிகிச்சை ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துக்குழுவின் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேசுகையில், 2 அல்லது 3 நாட்களில் அவருக்கு பைப்பாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.