/indian-express-tamil/media/media_files/pwvSRmp5vJslFsTLtEEG.jpg)
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாஜாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை துவக்கக் கூடாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என செந்தில் பாலாஜி கோரிக்கை வைப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்யலாம் என நீதிபதி கூறினார். குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை இன்று நேரில் ஆஜபர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.