/indian-express-tamil/media/media_files/VU6e7mUTOart3r3n4QGX.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தொடர்பான சில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டது. அதாவது, வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் உள்ள உண்மைத் தொகையை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், கடந்த 2016 முதல் 2017ம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.அல்லி விசாரித்துவருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் 3வது முறையாக ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்க அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் போலியாக மாற்றப்பட்டுள்ளன எனவும் வாதிடப்பட்டது. இந்த நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி எஸ். அல்லி நேற்று (ஜன.11,2024) வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 3வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.