’கோ மூத்ரா’ சர்ச்சை தொடர்பாக மக்களவையில் தி.மு.க எம்.பி செந்தில் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் முன்வைத்து எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி செந்தில் குமார் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசியபோது பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு அவர் மனிப்பு கேட்ட வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் தான் பேசியதற்கு மக்களவில் செந்தில்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது வார்த்தையை திரும்பப் பெறுவதாகவும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“