குறையத் தொடங்கும் கொரோனா உயிரிழப்பு : இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 5,752

Tamil Nadu corona virus: மகாராஷ்டிரா, ஆந்திர பிரேதேசம் ஆகிய மாநிலங்களை அடுத்து, 5 லட்சம் கொரோனா பாதிப்பைக் கண்ட மூன்றாவது மாநிலாமாக தமிழகம் திகழ்கிறது.      

Tamil Nadu corona virus: மகாராஷ்டிரா, ஆந்திர பிரேதேசம் ஆகிய மாநிலங்களை அடுத்து, 5 லட்சம் கொரோனா பாதிப்பைக் கண்ட மூன்றாவது மாநிலாமாக தமிழகம் திகழ்கிறது.      

author-image
WebDesk
New Update
Corona Virus news , covid- 19

Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் புதிதாக 5,752 (நேற்றைய எண்ணிக்கை 5,693) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்துள்ளது .

Advertisment

மகாராஷ்டிரா, ஆந்திர பிரேதேசம் ஆகிய மாநிலங்களை அடுத்து, 5 லட்சம் கொரோனா பாதிப்பைக் கண்ட மூன்றாவது மாநிலாமாக தமிழகம் திகழ்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தின் தினசரி கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கையில் அசாதாரண நிலைத்தன்மை காணப்படுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இன்று வரை (4 சந்தர்ப்பங்களைத் தவிர்த்து) தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,500 – 6,000 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 19 பேர்களும் அரசு மருத்துவமனைகலில் 39 பேர்கள் என 53 (நேற்றைய எண்ணிக்கை - 74 ) பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,434ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,799 பேர் (நேற்றைய எண்ணிக்கை – 5,717) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,53,165 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,912  ஆக உள்ளது.  பெங்களூர் பெருநகரில் இந்த எண்ணிக்கை 43,000 ஐத் தாண்டியுள்ளன. புனேவில் 75,000 ஆகவும் உள்ளன.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 991 (நேற்றைய எண்ணிக்கை 994) பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 498 ( நேற்று – 490), சேலம் – 297 (309),  செங்கல்பட்டு – 364 (299), கடலூர் – 296 ( 251), திருவள்ளூர் – 294  (300), திருப்பூர் – 192 (291), காஞ்சிபுரம் –  167 (189) , விழுப்புரம் – 125  (128) , திருநெல்வேலி – 72 (126) , வேலூர் –  135 (104) என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 10 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இன்று 991 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4, 761 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து, புனே, புது டெல்லி, மும்பை, பெங்களூரு, தானே, ஆகிய பெருநகரங்களிலும் தொற்று எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: