/indian-express-tamil/media/media_files/Gh1XmxAVTZ6EYqwsUkF7.jpg)
கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு வனப்பகுதியில் கீழே படுத்து கிடந்தது. யானையை மீட்ட வனத்துறையினர் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்து பின் வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.
இந்நிலையில் இந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத யானை குட்டி தாயிடமிருந்து பிரிந்து வேறொரு யானை கூட்டத்துடன் சேர்ந்து காட்டுக்குள் சென்றது. இதனிடையே திடீரென குட்டி யானை கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக சுற்றி திரிந்தது.
/indian-express-tamil/media/media_files/5m6waG1zCGmATbF5WI4A.jpg)
இதனை தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையின் முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த ஜூன் 9ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்கு யானை குட்டியை கொண்டு சென்று பராமரித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுயானை குட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு உயிரிழந்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/Gh1XmxAVTZ6EYqwsUkF7.jpg)
தாய் யானையை விட்டு பிரிந்திருந்த 3 மாத யானை குட்டியை முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் யானைக் குட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us