/tamil-ie/media/media_files/uploads/2022/04/girlfire-759.jpg)
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி, கடந்த மார்ச் 25 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கணவர் இல்லாமல் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலையில்லாமல் இருந்த போது, வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு (எ)சுப்பிரமணி தயாரிப்பாளர் என்று அறிமுகமானார்.
நான் சின்னத்திரையில் சிறிய வேடங்களில் நடித்து வந்தேன். அப்போது, நடிகைகள் இயக்குநர்களுடன் அட்ஜஸ்ட் செய் வேண்டும். அதனால், நான் உன்னை தயாரிப்பாளர் ஆக்குகிறேன். அப்போது, நீ யாரிடமும் வேலை கேட்க வேண்டியதில்லை என்றார். நான் அதை நம்பி அவருன் வெளியே கூப்பிடும் இடங்களுக்கு சென்றேன். ஒருமுறை, திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்ற போது, கண்ணை மூடி சுவாமி கும்பிட்ட போது, கையில் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டினார். நான் அதிர்ச்சி அடைந்தேன்.
எனது விருப்பமின்றி, மிரட்டி மிரட்டி பல முறை உறவில் ஈடுபட்டார். என்னை, பாலியல் தொழில் செய்யுமாறு மிரட்டினார். அவர் சொல்வது போல் நடந்து கொள்ளவில்லை என்றால் என்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். என்னை போல பல பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளார். அது போல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அவர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதானவர். எனவே, என்னையும் பெண் குழந்தையும் காப்பாற்றுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புகாரளித்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று மாலை டிஜிபி அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பைரவி, தலையில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய நேரத்தில் பைரவி மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதுகுறித்து மெரினா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.